Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கரோனா : மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 6,054 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 98, காரைக்காலில் 18, ஏனாமில் 2, மாஹேவில் 8 என மொத்தம் 126 (2.08 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலைச் சேர்ந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,787 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

3 குழந்தைகளுக்கு கரோனா தொற்று

கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை, 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் என 3 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 227 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 759 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 922 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 121 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 518 (97.75 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 14 லட்சத்து 61 ஆயிரத்து 252 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 280 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x