Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

வைகை அணையில் வெள்ள அபாயம் :

தேனி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை தீவிரம டைந்துள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 68.50 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

அணைக்கு விநாடிக்கு 970 கன அடி நீர்வரத்து உள்ளது. குடிநீருக்காக 769 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

69 அடியை எட்டியதும் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுஅணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x