Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

அழகர் கோயிலில் சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் :

அழகர்கோயிலில் ஆடிப் பெருந் திருவிழா நிகழ்ச்சிகள், கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் பங்கேற் பின்றி நடந்து வருகிறது.

ஒன்பதாம் நாளான நேற்று ஆடி பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக நேற்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சப்பரத்தில் தேவி, பூதேவியுடன் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். அதைத்தொடர்ந்து நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.

ஆடி பவுர்ணமி தினத்தில் பதினெட் டாம்படி கருப்பணசாமி சன்னதி கதவு களுக்கு சந்தனம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் கோயில் இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x