Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

விரைவு தபால் சேவை நேரம்சேலம் அஞ்சலகங்களில் நீட்டிப்பு :

சேலம்

சேலத்தில் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் விரைவு தபால் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பாண்டு இறுதிபருவத்தேர்வு ஆன்-லைனில் நடக்கிறது. மாணவ, மாணவிகளின் விடைத்தாள் அனைத்தும் விரைவு தபால் மூலம் தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வு முடியும் வரை, குறிப்பிட்ட தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அஸ்தம்பட்டி, அழகாபுரம் தபால் நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும், சேலம் தெற்கு தபால் நிலையம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், செவ்வாய்ப்பேட்டை துணை தபால் நிலையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும். தலைமை தபால் நிலையத்தில் தபால் பதிவு நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x