Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு :

தகவல் அறிந்து நேற்று காலை தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர், தேன்கனிக்கோட்டை போலீஸாரும் அங்கு சென்றனர். அப்போது, யானைகள் கூட்டம் முனுசாமியின் உடலை சுற்றி நின்றதால், அவரது உடலை மீட்க முடியவில்லை. பின்னர், வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டி உடலை மீட்டனர். இதுதொடர்பாக தேன்கனிகோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், முனுசாமியின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x