Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மார்த்தாண்டம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், வெட்டுமணி வாணியன்விளையில் மின்கம்பி அறுந்து விழுந்து ஆஷிகா என்ற 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். அதிகபட்சமாக சிவலோகத்தில் 68 மிமீ மழை பதிவாகியிருந்தது. சிற்றாறு ஒன்றில் 52 மிமீ, மயிலாடியில் 49, பூதப்பாண்டியில் 32, கன்னிமாரில் 34, கொட்டாரத்தில் 33,குழித்துறையில் 22, நாகர்கோவிலில் 38, பேச்சிப்பாறையில் 32,பெருஞ்சாணியில் 37, புத்தன்அணையில் 36, சுருளகோட்டில் 40,இரணியலில் 26, பாலமோரில் 40,மாம்பழத்துறையாறில் 39, கோழிப்போர்விளையில் 26, குருந்தன்கோட்டில் 28, முள்ளங்கினாவிளையில் 35, முக்கடல் அணையில் 30 மிமீ மழை பதிவானது.
பேச்சிப்பாறை அணைக்கு 1,193 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.90 அடியாக உள்ள நிலையில், 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 1,141 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 73.42 அடியாக உள்ளது. அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றில் 16.60 அடி, சிற்றாறு இரண்டில் 16.70 அடி, முக்கடல் அணையில் 23 அடி தண்ணீர் உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT