Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

மேகேதாட்டு அணைக்கு எதிராக குளித்தலையில் கையெழுத்து இயக்கம் :

கரூர்

மேகேதாட்டுவில் அணை கட்ட பிரதமர் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி குளித்தலையில் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் நேற்று கையெழுத்திட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் 30 நாட்கள் நடைபெறும் என்றும், அதன்பின் அவை பிரதமருக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x