Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் புதிதாக - 1,830 பேருக்கு கரோனா தொற்று :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,062, பெண்கள் 768 என மொத்தம் 1,830 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 44,870 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 24 லட்சத்து 86,192 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,516 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,305 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x