Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

காலாவதியான ஊட்டச்சத்து பொருள் : செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவு

கோவை

கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய விவகாரத்தில் செவிலியர்களிடம் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நகர் நல மையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் மூலமாக தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இப்பெட்டகத்தில் ஊட்டச்சத்து மாவு உட்பட 8 வகையான பொருட்கள் இருக்கும். அவற்றில் சில காலாவதியானதாக இருப்பது தெரிய வந்தது.

சிங்காநல்லூர் நகர் நல மையத்தில் ஆய்வு செய்தபோது, வழங்கப்பட்ட 21 பெட்டகத்தில் ஒரு பெட்டகத்தில் மட்டும் பேரீச்சம்பழம், நெய் ஆகியவை காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. எனவே, இது தொடர்பாக தொடர்புடைய நகர் நல மைய சுகாதார செவிலியர்கள் இருவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x