Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

கால்வாய்களில் 6 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றம் :

சென்னை

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், இந்தக் கால்வாய்களில் தங்குதடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவாக, கால்வாய்களை தூர் வாரவும், கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டது

இரு நவீன ஆம்பிபியன் இயந்திரங்கள், 3 சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் 4 ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களைக் கொண்டு கடந்த ஜூன் மாதம் முதல் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இரு மாதங்களில் மட்டும் 6,189 டன் வண்டல் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகள், கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x