Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
கலை இலக்கிய பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சுமற்றும் கவிதைப் போட்டிகள்ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதில் கல்லூரி மாணவ,மாணவியர் பங்கேற்கலாம்.
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரான மறைந்த ஜீவா னந்தத்தால் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டது. அது தனது 60-வது வைரவிழா ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.
இதை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளை ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஓராண்டு காலத்துக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேச்சுப் போட்டி
இப்பெருமன்ற நிறுவனர் ப.ஜீவானந்தம் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதிகவிதை மற்றும் ஆய்வுக்கட்டுரை போட்டிகள் நடை பெற உள்ளன. ‘செந்தமிழ் நாடிது- எங்கள் செந்தமிழ் நாடிது' என்ற தலைப்பில் நடைபெறும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் தட்டச்சுசெய்யப்பட்டால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கையால்எழுதப்பட்டால் 12 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரையை அனுப்ப வேண்டும்.
கவிதைப் போட்டி
‘தமிழ் எங்கள் உரிமை' என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதையை ஆகஸ்ட் 19-ம்தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97151 85309 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT