Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

பிளஸ் 2 துணைத் தேர்வுக்குஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் :

புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்கள் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி யான தேர்வர்கள் இணையதளம் வழியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில்சென்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகளில் பெற்றமதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களும் துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் கட்டாயம் அனைத்துபாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளுக்கு வராத மாணவர்களும், கடந்த மே மாதம் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் பிளஸ் 2 துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தனித்தேர்வெழுதும் மாணவர்கள் முத்தரையர் பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி யிலும், மாணவிகள் செல்லபெரு மாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் வரும் 27-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் வரும் 28-ம் தேதி பள்ளிகளுக்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x