Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் உரிய அனுமதியின்றி நடைபெறுவதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துமாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டும் பணி நடை பெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில் நிலத்துக்கு உரிய தொகையை நிர்ணயம் செய்து, அதற்கான அனுமதி மற்றும் ஒப்புதலைப் பெற்ற பிறகு கட்டுமானப் பணிகளை தொடரலாம் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தர விட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT