Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

கலை இலக்கிய பெருமன்ற வைர விழா போட்டி :

சென்னை

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் மறைந்த ஜீவாவால் 1961-ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 60-வது வைரவிழா ஆண்டையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை, இலக்கியப் போட்டிகளை ஆகஸ்ட்டில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக.15-ல் போட்டிகள் தொடங்குகின்றன.

இதில் பங்கேற்க விரும்புவோர் 7598849174, 9443694122 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களுக்கு, கல்லூரி அடையாள அட்டையை படம் எடுத்து, ஆக.10-க்குள் அனுப்பி பெயர்களைப் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஆக.15-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.

ஆக. 20-ல் ‘தமிழ் எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, ‘செந்தமிழ் நாடிது-எங்கள் செந்தமிழ் நாடிது’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெறும். விவரம் அறிய 97151 85309 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x