Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு :

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அம்மன் கோயில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் கூழ் வார்த்தல், பொங்கலிடுவது, நேர்த்திக்கடன் செலுத்தி வருவதுடன் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் கரோனா பரவல் காரணமாக ஆடி திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊரடங்கால் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள செல்லியம்மன் கோயில், குடியாத்தம் கெங்கையம்மன் கோயில், சத்துவாச்சாரி கெங்கையம்மன், வேலூர் ஆணைக்குளத்தம்மன், ஜலகண்டேஸ்வரர் கோயில், சார்பனாமேடு முத்துமாரியம்மன், சைதாப்பேட்டை கருமாரியம்மன், வாணியர் வீதி கனகதுர்கையம்மன், வசந்தபுரம் பூங்காவனத்தம்மன் என மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பெண்கள் அதிகளவில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x