Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

அமமுகவிலிருந்து தாம்பரம் நாராயணன் விலகல் :

அமமுகவின் செய்தித் தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில், “அமமுகவில் பல்வேறு பொறுப்புகளில் தாங்களே பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தாங்கள் கடைப்பிடிக்கும் நீண்ட மவுனமும், செயலற்ற நிலையும் என்னைப் போன்ற தீவிரமான செயல்பாடு உடையவர்களுக்கு ஏற்புடையது அல்ல. எனவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனதா தளம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய தாம்பரம் நாராயணன், காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர், தற்போது அமமுகவில் இருந்து விலகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x