Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM
தாம்பரம் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தாம்பரம் நகா் அனைத்து வியாபார சங்கத்தினரின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே சமீபத்தில் தாம்பரத்தில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், தாம்பரம் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், தாம்பரம் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்க திட்ட மதிப்பீடுகளை தயாரித்து அறிக்கையாக வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா தெரிவித்தார்.
அதேபோல் முடிச்சூர் சாலையில், இந்து மிஷன் மருத்துவமனையை ஒட்டி சர்வீஸ் சாலை ஏற்படுத்தவும் அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை இணைப்புக்குப்பின் பொதுமக்கள் எளிதாக வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT