Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

செங்கை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் பொறுப்பேற்பு :

தாம்பரம்

செங்கை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநராக இருந்த பி.எம்.என். முஜிபுர் ரஹ்மான் திருச்சி மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் இணை இயக்குநராக இருந்த கே. சரவணன் செங்கை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குநகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், இதர அலுவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். செங்கை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் இவரின் கட்டுப்பாட்டில் வரும்.

பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x