Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

கல்லல் அருகே அண்ணனை அடித்து கொன்ற தம்பி :

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அறிகுறிச்சியைச் சேர்ந்தவர் புவனேந்திரன் (39). நேற்று காலை இவருக்கும், இவரது தம்பி மதியழகனுக்கும் (30) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் புவனேந்திரனை மதியழகன் கட்டையால் அடித்தார். படுகாயமடைந்த புவனேந்திரனை உறவினர்கள் தேவகோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதையறிந்த கல்லல் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மதியழகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x