Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தொழிற்சாலைகளில் குறுகிய கால பயிற்சி மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி அளிப் பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தனகீர்த்தி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 15 தொழில் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் குறுகிய கால பயிற்சி நிலைய பிரதிநிதிகள், 25 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள், குறுகிய கால பயிற்சி நிலைய பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
தனியார் நிறுவன நிர்வாகிகள் பாஸ்கர்பாபு, சீனிவாசன், ஆனந்த்குமார் மற்றும் பயிற்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT