Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
டோக்கியோ நகரம், முன்பு எடோ (Edo ) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் அந்நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.
1868-ம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பானின் தலைநகராக உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது. இங்கு 3.8 கோடி பேர் வசிக்கின்றனர்.
வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.
வானிலை தெளிவாக உள்ள நாட்களில், டோக்கியோ நகரில் இருந்து பியூஜி மலையைப் பார்க்க முடியும்.
அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதால், அவற்றைத் தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
2-ம் உலகப் போரின்போது 2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ளதைப் போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னி லேண்ட் உள்ளது.
டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் உள்ளன.
100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT