Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்சின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாஜக மூத்த தலைவரும்உத்தர பிரதேச முன்னாள்முதல்வருமான கல்யாண் சிங், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4-ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனை நேற்றுவெளியிட்ட அறிக்கையில், கல்யாண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு செவ்வாய்க்கிழமைமாலை முதல், உயிர்காக்கும்கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் அவரதுஉடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட் டுள்ளது.
89 வயதான கல்யாண் சிங் ராஜஸ்தான் ஆளுநராகவும் இருந்துள்ளார். கல்யாண் சிங் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT