Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு

தியாகிகள் தினத்தையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஆன்-லைன் மூலம் மாநில மக்களிடையே பேசியதாவது:

ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் மென்பொருள் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனதுசெல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர் களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன். முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு நான் ஒட்டிவிட்டேன். மத்திய அரசையும் இதேபோல் ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்து விடும்.

நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும், செல் போன் ஒட்டுகேட்பு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன் றிணைந்து பாஜகவை துரத்த வேண்டும்.

பெகாசஸ் விவகாரம் தொடர் பாக உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x