Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர்எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதி ஆண்டின் 2-வதுகாலாண்டுக்கு (ஜூலை-செப்டம்பர்) பொது வருங்கால வைப்புநிதிக்கு 7.1 சதவீத வட்டி நிர்ணயித்து இந்திய அரசு அறிவித்துள்ளது. அதையடுத்து, தமிழகஅரசு ஊழியர்களின் ஜிபிஎஃப்தொகைக்கு 2-வது காலாண்டுக்கு 7.1 சதவீத வட்டி நிர்ணயித்துஉத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டுக்கும் 7.1 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT