Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம் :

சென்னை

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி முறை) சேரலாம். பிளஸ் 2 மாணவர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, உயிரியல், விவசாயம், இன்ஜினீயரிங் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் 3 பாடங்கள் முடித்திருக்க வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) மேற்குறிப்பிட்ட ‘லேட்ரல் என்ட்ரி’முறையில் சேர www.tngptc.in, www.tngptc.com ஆகிய இணையதளங்களில்ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இதே இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x