Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

அமைச்சர் நடத்தும் குறைகேட்பு நிகழ்ச்சி :

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு, அமைச்சர் பெ.கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகள் கேட்கிறார்.

இன்று (ஜூலை 22) மாலை 4 மணிக்கு பொட்டல்காடு, 4.30 மணி முள்ளகாடு, 5 மணி சுந்தர்நகா், 5.30 மணி கிருஷ்ணாநகர், பேரின்பநகர், 6.00 மணி பொன்னான்டிநகர், வைகோ தெரு, 6.30 மணி ஏவிஎஸ் பள்ளி ஆகிய இடங்களில் அமைச்சரிடம் மனு அளிக்கலாம். 23-ம் தேதி மாலை 4 மணி திருமாஜிநகா், 4.30 மணி அம்மன் கோயில் தெரு, 5 மணி சூசைநகர், 5.30 மணி தங்கம்மாள்புரம், 6 மணி சண்முகபுரம் ஆகிய இடங்களிலும், 24-ம் தேதி மாலை 4 மணி வீரநாயக்கன்தட்டு, 4.30 மணி முடுக்குகாடு, 5 மணி ஊரணி ஒற்றைவீடு, 5.30 மணி காதர்மீரான் நகர், 6.00 மணி கோயில்பிள்ளை நகர், 6.30 மணி முத்துநகர் இடங்களிலும் குறைகேட்கிறார். 25-ம் தேதி மாலை 4 மணி மீனவர் காலனி, 4.30 மணி தெர்மல் கேம்ப்-2 பகுதி, 5 மணி லேபர் காலனி, 5.30 மணி ஹார்பர், 6 மணி தெர்மல் கேம்ப்-1 பகுதி ஆகிய இடங்களில் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x