Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவர் ந.பன்னீர்செல்வம்(56). கடன் வாங்கித் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த மருத்துவர் மாதேஸ்வரனிடம் ரூ.2.85 கோடி மோசடி செய்ததாக பன்னீர்செல்வத்தை கோவை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று, பன்னீர்செல்வத்தை போலீஸ் காவலில் எடுத்த கோவை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ஆலங்குடிக்கு நேற்று அழைத்து வந்து அவரது வீடு, அலுவலகங்களில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT