Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

7 மாத குழந்தை உயிரிழப்பு :

திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரின் 7 மாத குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதனையில் அந்தக் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும், குழந்தையின் தந்தை உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x