Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

புதிதாக 148 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 148 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் 38 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. 46 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்த நிலையில், 428 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்த நிலையில், 297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏற்படாத நிலையில், 356 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51,493-ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு இதுவரை 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x