Published : 21 Jul 2021 03:17 AM
Last Updated : 21 Jul 2021 03:17 AM
நாட்றாம்பள்ளி அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிராஜாராம் (58). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அதேபகுதியைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளியான ராமன் (65) என்பவர் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறினார்.
2 மரங்களில் தேங்காய் பறித்து 3-வது மரம் ஏறி தேங்காய் பறிக்க முயன்றபோது ராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே, அவர் மயங்கினார்.
மரம் ஏறுவதற்காக அவரது இடுப்பில் கட்டப்பட்ட டயர் அவரை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால் அவர் மரத்தில் இருந்து கீழே விழாமல் உயிர் தப்பினார். இருப்பினும், 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் தொழிலாளி தொங்கிய நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடி யாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நவீன கருவிகளை கொண்டு மரம் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தொழிலாளி ராமனை பத்திரமாக மீட்டு நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT