Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM
பெகாசஸ் மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது.இதுகுறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்கள வையில் கூறியதாவது:
யாருடைய செல்போனையும் சட்டவிரோதமாக கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியம் இல்லை. இதனை ஆய்வு செய்து, சட்டவிரோத கண்காணிப்பு நடக்காமல் தடுக்கும் அளவுக்கு போதுமான செயல் திட்டத்தை நாம் வைத்துள்ளோம். நம் நாட்டில் நீண்ட காலமாக இதுபோன்ற அமைப்புகளை நாம்வலிமைப்படுத்தி வந்துள்ளோம். நமது சட்டங்களும் வலுவான வையாக உள்ளன.
இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஒரு இணையதளத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பெரும் குற்றச்சாட்டுக்களை கூறி வெளியிடப்பட் டுள்ள இந்த செய்தி, தற்செயலானது அல்ல என்று நான் கருதுகிறேன்.
குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது. இதில் துளியும் உண்மையும் இல்லை. பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இதனை செய்வதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT