Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

24 மணி நேரத்தில் 38,164 பேருக்கு கரோனா உறுதி :

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

ஜூலை 19-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,11,44,229 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக 3,03,08,456 பேர் குணமடைந் துள்ளனர். 24 மணி நேரத்தில் 499 பேர் உயிரிழந்தனர். மொத்தஉயிரிழப்பு 4,14,108 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 14,63,593 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x