Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM
கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரை மற்றும் நீர்வழிப்பாதை யில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 76 வீடுகளை கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்நிலையில், சீரநாயக்கன் பாளையத்தில் கிருஷ்ணாம்பதி குளத்தின் கிழக்கு கரை பகுதியில்ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 68 வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன. மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், லிங்கனூர் பகுதியில் கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகளையும் இடித்து அகற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கிருஷ்ணாம்பதி குளத்தில் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள்நடைபெறவுள்ளன. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இங்கு குடியிருந்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக மாற்று வீடுகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT