Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் ஆய்வு : நான்கு சார்-பதிவாளர்கள் இடமாற்றம் :

திருப்பூர்: திருப்பூர் நெருப்பெரிச்சலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலக வளாகம், அவிநாசி சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 14-ம் தேதி தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் நான்கு சார்-பதிவாளர்கள் அயல் பணி என்ற அடிப்படையில், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி ஐ.ஜி., சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அவிநாசி சார்-பதிவாளர் (நிலை 1) ரகோத்தமன், கோவை பதிவு மாவட்டம் சீட்டு மற்றும் சங்கம் சார் பதிவாளராகவும், கோவை மாவட்டம் மதுக்கரை சார்-பதிவாளர் இளங்கோ, அவிநாசி சார் பதிவாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். அவிநாசி சார்-பதிவாளர் (நிலை 2) உதயசங்கர், திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கிணத்துக்கடவு சார்-பதிவாளர் வெங்கிடுசாமி, அவிநாசி தற்காலிக இணை சார்-பதிவாளராக இடமாற்றப்பட்டார்.

திருப்பூர் ஜாயின்ட் 1 சார்-பதிவாளர் கனகராஜ், கோவை பதிவுத் துறை துணை அலுவலகத்துக்கு (புலனாய்வு) இடமாற்றப்பட்டார். தொட்டிபாளையம் சார்-பதிவாளர் உமா மகேஸ்வரி, உதகை பதிவு மாவட்டம் (வழிகாட்டி) சார்-பதிவாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x