Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

பல்லாவரம் நகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு :

பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த மதிவாணன், நகரமைப்பு அலுவலர் சேது ராஜன், நகரமைப்பு ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் நகராட்சி பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் நகரமைப்பு அலுவலர் சேது ராஜன், நகரமைப்பு ஆய்வாளர் பழனிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மதிவாணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும்முறைகேடுகள் குறித்து விசாரணைசெய்ய உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 5 பேர் கொண்ட குழு ஒன்று பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இரவு வரை நடைபெற்ற ஆய்வில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x