Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

மருதத்தூர் கிராம மக்களுக்கு மனைப் பட்டா :

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மருதத்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சொந்த வீடு இல்லாமல் இருந்து வந்த நிலையில், அவர்கள் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் மனு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு, 84 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் 84 ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் விருத்தாசலம் சார்-ஆட்சியர் அமித்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வப்பாண்டியன், தனி வட்டாட்சியர் கமலா மற்றும் திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x