Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆர்ப்பாட்டம் :

கரூர்: பொதுத் துறை நிறுவனமான மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுக்குழுத் தலைவர் எல்.முருகவேல் தலைமை வகித்தார். மின்வாரிய ஊழியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பால்ராஜ், பொறியாளர் சங்கச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, பள்ளபட்டி, தாந்தோணிமலை, காந்திகிராமம், ராயனூர், வேப்பம்பாளையம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x