Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM
இதுகுறித்து எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் சு.சுரேஷ் கூறியதாவது:
எலச்சிபாளையத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து சாலையின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் வெட்டப்பட்டது. எனினும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சலடிக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கவனத்தில் கொண்டு தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT