Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

கரோனா தொற்று குறைந்த நிலையிலும் - புதுச்சேரி ஜிப்மரில் குறைவான நோயாளிகளுக்கே வெளிப்புற சிகிச்சை : எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

புதுச்சேரி

கரோனா குறைந்த நிலையில் ஜிப்மரில் ஒவ்வொரு துறையி லும் குறைந்த அளவிலான நோயா ளிகளுக்கு மட்டுமே வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்தியஅரசு நிறுவனமான ஜிப்மர் மருத்து வமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2,600 பேரும் பணிபுரிகின்றனர். இதுதவிர, டெக்னீஷியன்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஜிப்மர் கோவிட் வார்டில்ஏராளமானோர் அனுமதிக்கப்பட் டனர். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கரோனாபாதிப்பு வெகுவாக குறைந்தது. இதையடுத்து ஜிப்மரில் கடந்தஜூன் 21-ம் தேதி முதல் மீண்டும்வெளிப்புற சிகிச்சைப் பிரிவு செயல் பட தொடங்கியுள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகுதான் நேரில் வர அனுமதி வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழ கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் பலரும் ஜிப்மரில் சிகிச்சை பெறுகின்றனர்.

கரோனா தொற்று குறைந்தாலும் வெளிப்புற சிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதுபற்றி புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து சிகிச்சைக்கு வரும் மக்கள் கூறுகையில், “கரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் நேரடியாக வந்து சிகிச்சை பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் இணையதளத்தில் துறை வாரியாக குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில், தங்களுடைய பிரச்சி னைகளுக்கான எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். பிறகு மருத்துவர்களுடன் தொலை மருத்துவ கலந்தாலோசனை பெற வேண்டும்.

அப்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் கடந்த ஓராண்டாக நோயாளிகள் கடும் பாதிப்பில் உள்ளோம்.

தற்போது கரோனா தொற்று 2-வது அலை குறைந்துள்ளது. ஜிப்மரில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு துறையிலும் அதிகளவாக 25 நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளிப்புற சிகிச்சைக்காக அனுமதிஅளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை.

இதனால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலத்தோடு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துணைநிலை ஆளுநரோ, தமிழகம் - புதுச்சேரி முதல்வர் களோ, எம்பிக்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x