Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM
கரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த மாசி மாத பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு, நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு (தினமும் 5,000) செய்யும்பக்தர்கள் மட்டும் வரும் 21-ம் தேதிவரை சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வர விரும்புவோர் 2 தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT