Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

வங்கதேசத்தை சேர்ந்தவர் சிறையில் அடைப்பு :

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனக் கூறி, திருப்பூர் பாண்டியன் நகரில் 2 ஆண்டுகளாக தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் முகமது சொஹல் ராணா(28).

தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த மேற்குவங்க முகவரி போலியானது, அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட முகமது சொஹல்ராணா, நேற்று சென்னைசைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x