Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM
கடலூர்: மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 16-ம் தேதி கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜூன் மாதம் 24-ம் தேதி இரவு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் கடந்த 10- ம் தேதி கீழணையில் இருந்து வடவாற்றில் காவிரித் தண்ணீர் திறக்கப்பட்டு அது வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 11-ம் தேதி காலை வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஏரி நிரம்பி வந்தது. இந்த நிலையில் கீழணையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஏரிக்கு நேற்று விநாடிக்கு 323 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஏரியில் 39. 50 கன அடி தண்ணீர் உள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதிகளில் 44 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT