Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘உங்கள்தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ், முதல்வரால் பெறப்பட்ட மனுக்கள் உரிய துறைகளுக்கு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகின்றன. அவ்வாறு தீர்வு காணப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு முதல்வரால், இதுவரை 4 முறை, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 3 லட்சத்து51,486 மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில் 1 லட்சத்து 76,268 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பெறப்பட்ட 2,100 மனுக்களில் 986 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இவற்றில் 2 மாற்றுத் திறனாளி பயனாளிகள் உட்பட 13 பேர், முதல்வரிடம் இருந்து நேரில் நலத்திட்ட உதவியைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT