Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது ஆண் யானை இறப்பு :

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட 6 வயதுடைய ஆண் யானை இறந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் அருகே புள்ளல்லி காட்டுப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்பார்த்து, தேன்கனிக் கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்றனர்.

கால்நடை மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சையளித்தனர். அப்பகுதியில் பெய்த தொடர் மழையிலும் யானைக்கு தேவையான சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை யானை இறந்தது.

இதனை தொடர்ந்து அங்கேயே யானை உடற்கூறு ஆய்வு மேற் கொள்ளப்பட்டு, புதைக்கப்பட்டது. முதற்கட்ட உடற்கூறு ஆய்வில் யானைக்கு வாய் புண் காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x