Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு :

எஸ்.சிவசுப்பிரமணியன்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளராக சிவசுப்பிரமணியன் நேற்று பொறுப்பேற்றார்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன், சென்னையிலுள்ள நகராட்சிகளின் நடுவர் மையம் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எஸ்.சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

நேற்று அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மாநகராட்சியில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x