Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

தடுப்பணை கட்ட தடை கோரி வழக்கு :

திருமங்கலம் அருகே தெற்கா ற்றில் தடுப்பணை கட்ட தடை விதிக்கக்கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கள்ளிக்குடி-திருமங் கலம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மாரியப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வடகரை, தூம்பக்குளம், கல்லணை, நெடுங்குளம், டி.கொக்குளம், மேலஉப்பிலிகுண்டு, மைக்குடி உள்ளிட்ட 8 கிராமங்களில் வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

சாத்தங்குடி அருகே தெற் காற்றில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை நடவடிக் கை எடுத்து வருகிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் எங்கள் பகுதியில் வறட்சி ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே தடுப் பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர், ஊரக வளர்ச்சித்துறை செயலர், மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x