Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

கந்துவட்டி வழக்கில் - வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி :

மதுரை

மதுரையில் கந்துவட்டி கொடு மையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைதான வழக்கறிஞரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமதுஅலி (37). உணவகம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

கந்துவட்டி கொடுமையால் முகமதுஅலி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் வெளி யிட்ட வீடியோவில், கடன் தந் தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு தன்னை துன்புறுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என முகமது அலியின் மனைவி பாத்திமா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வட்டி கட்ட முடியாவிட்டால் செத்துப் போ என முகமுது அலியிடம் செல்வகுமார் கூறியுள்ளார்.

இதுவே முகமது அலியின் தற்கொலைக்கு காரணமாக இருந் துள்ளது.

இதனால் செல்வக்குமாருக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x