Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக ராமமூர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பார்த்தீபன், சென்னை நில நிர்வாகத்துறை இணை ஆணையராகவும், தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராமமூர்த்தி, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராமமூர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT