Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

ரிஷப் பந்துக்கு கரோனா தொற்று :

லண்டன்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதை உறுதி செய்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், கடந்த8 நாட்களாக ரிஷப் பந்த் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், தற்போது வரை அவருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்றே இருப்பதாகவும் கூறியுள்ளார். ரிஷப் பந்த் மீண்டும் எப்போது அணியினருடன் இணைவார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாஇந்திய அணி வீரர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில். “இங்கிலாந்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகமானஇடங்களைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x