Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

மாஞ்சா நூல் பட்டத்துக்கு60 நாட்கள் தடை நீட்டிப்பு :

சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விற்பனை செய்ய, 60 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் பலர் காயமுற்றனர். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தடை விதித்தார்.

தடையை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சிலர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து அதாவது, ஜூலை 14 முதல் செப்.11 வரை நீட்டித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x